மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர்!!!!!

.மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக நிரூபிக்கும் ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜெக்சன்
அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.
அவர் இலங்கையின் ஆரம்ப கால வரலாறு பற்றி தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் பிரதி ஜனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்றும் அவர் தன் கண்டுபிடிப்பின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரது கண்டுபிடிப்பின் பிரகாரம் கௌதம புத்தர் தொட்டு மஹிந்த வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.
கௌதம  புத்தரின் தகப்பனார் - சுத்தோதன
சுத்தோதனவின் சகோதரர் - அமிதோதன
அமிதோதனவின் மகன் - பண்டுசாக்கிய
பண்டுசாக்கியவின் மகள் - பத்த கச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவஸ்தெவி அரசரை மணக்கின்றார்.
அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன் - பண்டுகாபய
பண்டுகாபயவின் மகன் - முட்டசீவ
முட்டசீவவின் மகன் - தேவானம்பியதிஸ்ஸ
தேவானம்பியதிஸ்ஸவின் சகோதரன் மகாநாக வாகும்.அவர் தான் ருஹுணையில் புதியதொரு இராசதானியை உருவாக்கியவராவார்.
மகாநாகவின் சகோதரன் - யடாலதிஸ்ஸ
யடாலதிஸ்ஸவின் சகோதரன் - கோட்டாபய
கோட்டாபயவின் மகன் - காவன்திஸ்ஸ
காவன்திஸ்ஸவின் மகன் - துட்டகைமுனு
அதன் பின்பு துட்டகைமுனு தொடக்கம் ராஜபக்ஷ பரம்பரை வரையான சங்கிலித்தொடரை ஜெக்சன் அண்டனி விளக்கவில்லை. ஆயினும் துட்டகைமுனுவின் பின் இலங்கையை ஒரே குடையின் கீழ்  கொண்டுவந்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் அவர் துட்டகைமுனுவின் பரம்பரை வழிவந்தவர் என்றும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதற்கிடையே தாம் துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தான் என்று நிரூபிக்கும் வகையில் ராஜபக்ஷவினரும் தற்போதைய நாட்களில் அனுராதபுரம் பூராகவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி ஒரு பாரிய தேடலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
இதற்கிடையே மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர் என்ற கருத்து பெரும்பான்மை பௌத்த மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக நிரூபிக்கும் ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜெக்சன் அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.
அவர் இலங்கையின் ஆரம்ப கால வரலாறு பற்றி தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் பிரதி ஜனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்றும் அவர் தன் கண்டுபிடிப்பின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரது கண்டுபிடிப்பின் பிரகாரம் கௌதம புத்தர் தொட்டு மஹிந்த வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.
கௌதம  புத்தரின் தகப்பனார் - சுத்தோதன
சுத்தோதனவின் சகோதரர் - அமிதோதன
அமிதோதனவின் மகன் - பண்டுசாக்கிய
பண்டுசாக்கியவின் மகள் - பத்த கச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவஸ்தெவி அரசரை மணக்கின்றார்.
அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன் - பண்டுகாபய
பண்டுகாபயவின் மகன் - முட்டசீவ
முட்டசீவவின் மகன் - தேவானம்பியதிஸ்ஸ
தேவானம்பியதிஸ்ஸவின் சகோதரன் மகாநாக வாகும்.அவர் தான் ருஹுணையில் புதியதொரு இராசதானியை உருவாக்கியவராவார்.
மகாநாகவின் சகோதரன் - யடாலதிஸ்ஸ
யடாலதிஸ்ஸவின் சகோதரன் - கோட்டாபய
கோட்டாபயவின் மகன் - காவன்திஸ்ஸ
காவன்திஸ்ஸவின் மகன் - துட்டகைமுனு
அதன் பின்பு துட்டகைமுனு தொடக்கம் ராஜபக்ஷ பரம்பரை வரையான சங்கிலித்தொடரை ஜெக்சன் அண்டனி விளக்கவில்லை. ஆயினும் துட்டகைமுனுவின் பின் இலங்கையை ஒரே குடையின் கீழ்  கொண்டுவந்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் அவர் துட்டகைமுனுவின் பரம்பரை வழிவந்தவர் என்றும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதற்கிடையே தாம் துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தான் என்று நிரூபிக்கும் வகையில் ராஜபக்ஷவினரும் தற்போதைய நாட்களில் அனுராதபுரம் பூராகவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி ஒரு பாரிய தேடலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
இதற்கிடையே மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர் என்ற கருத்து பெரும்பான்மை பௌத்த மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
 நன்றி  தமிழ் வின்   

உலகின் தெய்வம் நீயே


உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது 
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல்
பார்பவளும்  நீயே !
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே

ஆங்கில அறிவை விருத்தி செய்ய இலவசம்!!!!!!!!!!!!!!!!

பல மொழிகள் பேச என  முன்னர் இந்த தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தேன். .
  தற்போது இத்தளம் பல புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இங்கு Active English ஆறு நாட்களுக்கு இலவசம் . ஜயோ!!! இலவசம் என்று சொல்லி கருணாநிதி மாதிரி நான் ஒட்டு கேட்கவில்லை. ஆங்கிலம் கற்க ஆவல் உள்ளவர்கள் Active English என இத்தளத்தில் தேடி உங்களது ஆங்கில அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள்.Facebook  வைத்திருபவர்கள் Facebook  ஊடாகவே இத்தளத்தில்  இணைந்து  கொள்ளலாம்.

மிதிவெடியை மட்டும் நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை தமிழ் பெண்கள்

மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது














இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும் நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை என்கிறது ஆவணம்.

.என்றும் இளமையாக வாழ !!!!!

40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான். இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ உங்களது 20 வயதுகளில் நீங்கள்
என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்கள், எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.
40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைபயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். மேலும் இந்நிபுணர்கள் பல யோசனைகள் கூறியுள்ளனர் அவைகளுள் ஒன்று உடற்பயிற்சி.
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ அல்லது இன்னும் பிற விளையாட்டோ அல்லது உடற் பயிற்சி கூடத்திலோ இவைகளுள் ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும்.மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள் உடலினை விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது